தமிழ்த்துறை(தன்னிதிப்பிரிவு)

DEPARTMENT OF TAMIL SELF FINANCE

தமிழ்த்துறை தன்னிதிப்பிரிவு வரலாறு


2011-2012 ஆம் கல்வியாண்டில் தமிழ்த்துறை தன்னிதிப்பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவியருக்குத் தமிழ் மொழியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் விதமாக பாடத்திட்டங்களை வரையறுத்து அதன் வாயிலாக சவால்கள் நிறைந்த சமூகத்தை எதிர்கொள்ள தரமானகல்வியைப் போதிப்பதோடு போட்டித்தேர்வுகளுக்கு மாணவியரை ஆயத்தப்படுத்துவதிலும் அறச்சிந்தனையுடன் கூடிய ஆன்மீக உணர்வை ஊட்டி சிறந்த பெண்மணிகளாக உருவாக்குவதிலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

தொலைநோக்கு (Vision)

தமிழ்மொழியின் தொன்மையையும் வளர்ச்சியையும் இலக்கியங்களின் வழி அறியலாகும் தமிழர்களின் கலை, அறிவியல், பண்பாட்டுக்கூறுகளையும் கற்றுணர்ந்து அவற்றை அழியாமல் பாதுகாப்பதோடு மாணவியரை வேலைவாய்ப்பிற்குத் தகுதிப்படுத்துதல்.

செயலாக்கம் (Mission)

தமிழ் இலக்கியங்களில் வேரூன்றியுள்ள நன்மதிப்பீடுகளால் ஆழ்ந்தஅறிவும், அறிவுமிளிரும் நல்சமூகமும், சமூகத்தைப்பிரதிபலிக்கும் படைப்புகளும் உருவாக ஊக்கமளித்து மொழியை வளப்படுத்துதல்.

குறிக்கோள்

  • மாணவர்களின் பன்முக ஆளுமையை வளர்த்தெடுத்தல்
  • உயர்தர கல்வி முறைகளின் வழியே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தல்
  • மாணவர்களின் தனித்தன்மையையும் வேறுபட்ட சிந்தனைகளையும் ஊக்குவித்தல்.
  • பாடப்பகுதிகளின் வழியே சமூக மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துதல்